தமிழ் அன்று சுவாசமாய்!
ஆங்கிலம் அலுத்தால்
இன்றொரு மாற்றத்திற்காய்!
நா நுனியில் ஆங்கிலம்
இனிக்க இனிக்கப் பேசுவாள்
அழகியத் தமிழ் மகளிவளென
புகழ்ந்துப் பேசுகிறார்...
வியந்துப் பார்க்கிறார்!
இந் நிலை மாற்ற
தமிழைத் தேற்ற
புரட்சி செய்வதன்றி
வேறு வழியுண்டோ?!
அப்புரட்சி செய்திடவும்
என் பாரதி
இங்கில்லையே!
அவன் நெஞ்சுப் பொறுக்காதே!
இனி யொரு விதிசெய்ய
தமிழ்வளர்க்கச் சங்கம் வைப்போமெனில்
அதற்குமோர் விவாத மெழுமே!
சங்கம் வைப்பது
அமெரிக்காவிலா?
துபாயிலா?.....!....
Sunday, December 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment