Friday, September 26, 2008

கல்வியென்பது....

"கற்றது கைமண்ணளவு...
கல்லாதது உலகளவு!"

இன்று...

கற்க முற்பட்டது கைமண்ணளவு...
கற்று கொண்டது களிமண்ணளவு...
விற்க முற்பட்டது அவ்வளவும்...
விற்று தீர்ந்தது தன்னளவே!

அரசியல்!

விலங்கினை பகுத்தறிந்து
ஆராய்வது விலங்கியல்...
விலங்கான மனிதனை
பகுத்தறிவது அரசியல்!

வரலாறு!

முன்பே நிகழ்ந்ததல்ல வரலாறு...
நாளை படைக்கவிருப்பதே வரலாறு!
மாறி வருவது புவியியல்...என்றும்...
மாறாமல் நிற்பதே வரலாறு!