அன்பைமட்டும் வாரி இறைத்த
என்னைப் போல் ஒருவள்
இன்று உன்னுடன் இருக்கையில்
நானெதற்கு என்று நினைத்துவிட்டாயா?
என்னன்பு மகனே?!
இப்படி எட்டி உதைக்கத்தான்
என்வயிற்றில் ஒத்திகைப் பார்த்தாயா?
அன்றுபோல் இன்றும் மகிழ்கிறேன்!
நீ மகிழ்ச்சியுடன் இருப்பதனால்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment