Monday, November 19, 2007

தாமரையின் கோபம்!

என்னவனின் ஒளியை உண்டு
இரவிலுனைக் குளிரவைக்கும்
அவளை மட்டும்நீ பார்க்கிறாய்!

ஒளிதரும் என்னவனைப் பார்க்க
உன் கண்கள் கூசுகிறதா?

இதனால்தான்.....அவன்
என்னைக் குளிரவைத்து
உன்னைச் சுட்டெரிக்கிறான்!

No comments: