உன்னை என்னோடு அழைத்து வந்தேன்
உன் உறைவிடமானேன்
என்னுள் எத்தனை யெத்தனை இன்பங்கள்? !
உறவுகள் சூழக் கொண்டாட்டங்கள்!
இவையாவும் நீடிக்குமென
நான் கண்ட கனவு பொய்த்தது!
எல்லைமீறி உன்னை நான்
என்னோடு நிறைத்திருந்தது குற்றமாம்!
சட்டம் எனை விரட்டியது
நான்மட்டும் தப்பிக்க முயன்றேன்
உனையென் உறவுகளிடமாவது
விட்டு வைக்கலாமென்று எண்ணி
எத்தனைக் காலம்தான் ஒளிவது?
சட்டமுனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது!
உனை இழந்த நான்
பிழைக்க வழித்தேடி அலைகிறேன்
பேராசை பெருநஷ்டம் என்பர்!
இன்றுணர்ந்துக்கொண்டேன்...
பணத்தாசைப் பேராசையேன்று!
நேற்று வந்தாய்...
இன்று சென்று விட்டாய்!
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment