Thursday, April 24, 2008

ஏதுமில்லா காதல்!

சொல்லியும அர்த்தம் விளங்கவில்லை...
அர்த்தமாய் சொல்ல தெரிவதுமில்லை!

நினைத்தால் இன்பம் முடியவில்லை...
இன்பமாய் நனைக்க முடிவதுமில்லை!

உன்சொற்களை எதிர்ப்பார்த்தால்...
ஏமாற்றம் மிஞ்சுமென்று...

என் சொற்களுக்கு...
அணை கட்டினேன்...
அணையும் நிரம்புவதில்லை!

இந்நிலைத் தேற்ற வழியுண்டோ?
வழிக் கண்டால் ஏதுபயன்?
தேற்றிக் கொள்ள மனதுமில்லை!

1 comment:

பணம் பணம் பணம் said...

அலைகள் அடங்குவதும் இல்லை....
காதல் ஓய்வதும் இல்லை....
காலன் எனும் காவல்காரன் கைப்பற்றும் வரை !!!