ஐந்தாண்டு காலங்கள்
கண்டதென்ன? கொண்டதென்ன?
சிந்தித்துப் பார்க்கவே
குழப்பந்தான் மிஞ்சுதே!
குழம்பிய தெளிவினிலே
“குறள்’ கின்றேன்
கேளுங்கள்.........
தேர்தல் என்பது யாதெனின் என்றேனும்
ஓரிரு நலம் பயக்குவது.
அரசியலில் ஊழல் நன்றன்று அன்று
ஊழலே அரசியல் இன்று.
ஊழல்செய்வா ரனைவ ரவருள்சிறுக
செய்வாரை கொணர்தல் நன்று.
ஒட்டுவார் ஒட்டுக சுவரொட்டி அதனை
ஆடுகள் மேயு மாறே.
தேர்தலில் வாக்களிப்பார் வாக்கு அச்சொல்
நீரினில் எழுதிய சொல்.
Thursday, September 3, 2009
Subscribe to:
Posts (Atom)