முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! அவன்
தன்மைக்கு விடை கொடுத்தோம் பாரீர்!
மண்காக்க உயிர் கொடுத்தார் தோழர்!
இன்றவர்தம்
வன்மைக்கு கை கூப்ப சோம்பல்!
நட்பை காக்க
பொருள் துறந்தாரன்று!
பொருள் சேர்க்க
நட்பை துறக்கிறாரின்று!
உண்மை வேறு
பொய் வேறு அன்று!
உண்மையும் பொய்யும்
ஒன்றுதானின்று!
நேற்றென்ன ?
இன்றென்ன?
நாளையென்ன?
.
.
.
.
பொருள்
காலத்தை வென்றும்
நிற்பதென்ன?
மனிதனென்ன?
குரங்கென்ன?
மரமென்ன?
யாவும் ஒன்றென்றே
உரைத்தால் தவறென்ன?
...
Sunday, January 4, 2009
இன்றைய “அறிவு”இயல்....
அறிவுடையார் எல்லாம் தமக்குரியர் அறிவிலார்
என்பும் உரியர் பிறர்க்கு...
அறிவீனும் கல்வி அது ஈனும்
பொருளெனும் நாடாச் சிறப்பு......
என்பும் உரியர் பிறர்க்கு...
அறிவீனும் கல்வி அது ஈனும்
பொருளெனும் நாடாச் சிறப்பு......
Subscribe to:
Posts (Atom)