Thursday, September 3, 2009

தேர்தல்

ஐந்தாண்டு காலங்கள்
கண்டதென்ன? கொண்டதென்ன?
சிந்தித்துப் பார்க்கவே
குழப்பந்தான் மிஞ்சுதே!


குழம்பிய தெளிவினிலே
“குறள்’ கின்றேன்
கேளுங்கள்.........


தேர்தல் என்பது யாதெனின் என்றேனும்
ஓரிரு நலம் பயக்குவது.

அரசியலில் ஊழல் நன்றன்று அன்று
ஊழலே அரசியல் இன்று.

ஊழல்செய்வா ரனைவ ரவருள்சிறுக
செய்வாரை கொணர்தல் நன்று.

ஒட்டுவார் ஒட்டுக சுவரொட்டி அதனை
ஆடுகள் மேயு மாறே.

தேர்தலில் வாக்களிப்பார் வாக்கு அச்சொல்
நீரினில் எழுதிய சொல்.


Sunday, January 4, 2009

இன்றென்ன மனிதன்?

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! அவன்
தன்மைக்கு விடை கொடுத்தோம் பாரீர்!

மண்காக்க உயிர் கொடுத்தார் தோழர்!
இன்றவர்தம்
வன்மைக்கு கை கூப்ப சோம்பல்!

நட்பை காக்க
பொருள் துறந்தாரன்று!

பொருள் சேர்க்க
நட்பை துறக்கிறாரின்று!

உண்மை வேறு
பொய் வேறு அன்று!
உண்மையும் பொய்யும்
ஒன்றுதானின்று!


நேற்றென்ன ?
இன்றென்ன?
நாளையென்ன?
.

.
.
.
பொருள்
காலத்தை வென்றும்
நிற்பதென்ன?

மனிதனென்ன?
குரங்கென்ன?
மரமென்ன?


யாவும் ஒன்றென்றே
உரைத்தால் தவறென்ன?



...

இன்றைய “அறிவு”இயல்....

அறிவுடையார் எல்லாம் தமக்குரியர் அறிவிலார்
என்பும் உரியர் பிறர்க்கு...

அறிவீனும் கல்வி அது ஈனும்
பொருளெனும் நாடாச் சிறப்பு......