Thursday, October 30, 2008

உலகத்தோடொட்டவொழுகல்......

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்-இவர்

உலகத்தா ருள்ளத்துள்
உளமாற உய்குவார்!

நண்பனுக்கும் நண்பனாய்- ஆங்கே
பகைவனுக்கும் நண்பனாய்
சிறப்பொடு செய்கிறார்!
செல்வந்த ராகியே
செழிப்பொடு சிரிக்கிறார்!- இவரை

நம்புதல் யாவர்க்கு மெளிய அறியவாம்
நம்பிய வண்ணம் பெறல்.....

எனவறிந்தும்....

“உலகத்தோ டொட்டவொழுகல்”
எனச் சொல்லியே

பேதையவ ரிவரை
பின்தொடர் வாரேன்?!

ஏய்ப்போரை
போற்றுவாரேன்?!

“உலகத்தோ டொட்டவொழுகல்”

வள்ளுவனே? நீயெதைச் சொன்னாய்?!