சுயத்தையும் அற்றொழித்து
பொருட்பெற விழைகிறார்!-பின்
அப்பொருள் துறப்பரெனினும்
சுயத்தை மீட்க
வழியிலை யென்றறிந்தும்!
நெஞ்சகத்தே பொய்யின்றி
இச்சகத்தில் இன்பமுற
வழியுமிலை யென்கிறார்!
உச்சக்கட்ட ஆசைதனில்
சுயமென்ன? அறமென்ன?
சுயாதீனம் அற்றபின்
சுதந்திரத்தின் பொருளென்ன?
பஞ்சமுமிங்கு வந்ததே!
வாய்மைக்குமே! என்
தாய் திருநாட்டினிலே!
வாய்மையிங்கு வறண்டேபோயினும்
வாய்பிளப்பார் யாருமில்லை!
"வாய்திறந்தால் வறுமையோ" வென
அச்சம்கொண்ட தரணியிலே!
...............................................................!!!!!
.....இது.........அறமாமோ?!
Sunday, June 15, 2008
Subscribe to:
Posts (Atom)