Thursday, April 24, 2008

ஏதுமில்லா காதல்!

சொல்லியும அர்த்தம் விளங்கவில்லை...
அர்த்தமாய் சொல்ல தெரிவதுமில்லை!

நினைத்தால் இன்பம் முடியவில்லை...
இன்பமாய் நனைக்க முடிவதுமில்லை!

உன்சொற்களை எதிர்ப்பார்த்தால்...
ஏமாற்றம் மிஞ்சுமென்று...

என் சொற்களுக்கு...
அணை கட்டினேன்...
அணையும் நிரம்புவதில்லை!

இந்நிலைத் தேற்ற வழியுண்டோ?
வழிக் கண்டால் ஏதுபயன்?
தேற்றிக் கொள்ள மனதுமில்லை!

அழகாய்!

அழகாய் வளர்ந்து
அழகாய் பூத்து
அழகாய் மலர்ந்த
காதல் பூவை
அழகாய் வெட்டி
எடுத்து சென்றான்
கால மென்னும்
காதல்பூந் தோட்டத்து
காவல் காரன்!

Sunday, April 20, 2008

தொகை!

இப்பூமியில் நல்லோர் எண்ணிக்கை குறுந்தொகை!
தீமையில் வல்லோர் எண்ணிக்கை பெருந்தொகை!

புறநானூற்று வெற்றி!

இங்கே அகத்தை மதிப்பவர் நானூறு!
புறத்தை மதிப்பவரோ நானூறு கோடி!
இதுவே எங்கள் புறநானூற்று வெற்றி!!!

கூண்டில்....

கூண்டுக்கிளியைக் கண்டு
அனுதாபம் கொள்கிறான்!
தான் அதனினும்
அகண்ட கூண்டில்
அடைப்பட்டுக் கொண்டு!!....

கர்ஜனை!

சிங்கம் கர்ஜிக்கிறது!
தன்னினும் கொடியவனாய்
உயிர்களை வதைத்தும்...
சுதந்திரமாய் நடமிடும்....
மனிதனைக் கண்டு!!!!!