Monday, February 18, 2008

ஊடல்!

இதழோடு ஊடற்கொண்ட
ஆசை மொழிகள்...
ஓசையின்றி மனதில்...
ஆயிரம் கோலமிடும்!

விழிகளில் பொய்கள் ஜாலமிடும்!
ஓரினிய வசந்தக்கால போர்க்களம்!

ஒலி!

அவள் மனதில் ஒலித்தது...
இவன் மனதின் ஓசை!

அவள் சொற்களின் மௌனத்திலோ...
உடைந்தது இவன் மனம்!

காதலின் வளமை!

தனிமையில் மனதும்...
மௌனத்தில் இதழும்...
காதலில் இனிமை!

ஆசைகள் மோதிக்கொள்ளும்...
கவிதையில் கூடிக்கொள்ளும்...இது
காதலின் உரிமை!

ஒருவர் உளியாய்...
ஒருவர் சிற்பியாய்...
செதுக்கிக் கொள்வர்...
காதலெனும் ஓரழகிய சிற்பம்!

ஓசை!

எழுத்தின் தனிமை...
சொல்லின் மௌனம்!

சொற்களின் தனிமை...
கவிதையின் மௌனம்!

கவிதையின் தனிமை...
மொழியின் மௌனம்!

மொழியின் தனிமை...
பேச்சின் மௌனம்!
மொழியின் மயானம்!

மௌனத்தால் ஏதுபயன் கண்டார்?
ஓசையே மௌனத்தின் வலியது!