Monday, January 14, 2008

உகந்ததே!

பணமும் புகழும் உகந்ததே!
உனக்குத் தலைக்கனம் இல்லாதவரை!

பெருமையும் பெருமிதமும் உகந்ததே!
உனக்குப் பகட்டில் லாதவரை!

தற்புகழ்ச்சியும் உகந்ததே! -நீ
பிறரை ஏளனம் செய்யாதவரை!

அளவுகோல்!

அன்பையும்கூட அளந்துவிடு!
ஏனெனில்....
அளவுக்கு மிஞ்சினால்....
அதுவும்.......நஞ்சுதான்.......!

மறந்தும் நீ
முயற்சியை அளந்துவிடாதே!
அளவுக்கு மிஞ்சினால்.....
அதுதான் வெற்றியை தரும்!
இன்பம் தேனென பாயும்!