உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்-இவர்
உலகத்தா ருள்ளத்துள்
உளமாற உய்குவார்!
நண்பனுக்கும் நண்பனாய்- ஆங்கே
பகைவனுக்கும் நண்பனாய்
சிறப்பொடு செய்கிறார்!
செல்வந்த ராகியே
செழிப்பொடு சிரிக்கிறார்!- இவரை
நம்புதல் யாவர்க்கு மெளிய அறியவாம்
நம்பிய வண்ணம் பெறல்.....
எனவறிந்தும்....
“உலகத்தோ டொட்டவொழுகல்”
எனச் சொல்லியே
பேதையவ ரிவரை
பின்தொடர் வாரேன்?!
ஏய்ப்போரை
போற்றுவாரேன்?!
“உலகத்தோ டொட்டவொழுகல்”
வள்ளுவனே? நீயெதைச் சொன்னாய்?!
Thursday, October 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
படித்தேன் ரசித்தேன்
basheer .S
மிக்க நன்றி! பஷீர்!
Post a Comment