Saturday, February 16, 2008

கனவு!

பகலில் கனவு...
உழைப்பை கெடுப்பது- நீ
சோம்பலில் விழுவது!

இரவில் கனவு...
உறக்கம் கெடுப்பது- நீ
உற்சாகம் இழப்பது!

பகல் கனவு பலிக்கா தென்பர்!
இரவில் கண்டால் மட்டும்
பலிக்குமா என்ன??

சிந்தனை மட்டுமே
செயலில் எழுவது!

கனவில் விளைவது சிற்றின்பம்!
சிந்தனையில் விளைவதே பேரின்பம்!

சிந்தனை செய்!
செயலில் கொள்!
பேரின்பம் காண்!

No comments: