Sunday, February 3, 2008

கடுமை!

கோடியில் புரளும்
செல்வந்தன் மனதில்
மகிழ்ச்சியின் வறுமை!

"உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ?"- என்றுழைத்தும்
இளமையில் வறுமை!

................................................

செழுமையிலும் மகிழ்ச்சியின் வறுமை!
செம்மையிலும் செழுமையின் வறுமை!

இதுவோ...
காலத்தின் கொடுமை?!
படைத்தவனின் கடுமை?!

விளைவு.....
"வறுமையிலும் செம்மை"
இன்றானது மடமை!

No comments: