வாய்மை யெனப்படுவது யாதெனின் தனக்கென்றும்
தீமை இலாத சொலல்!
பொய்ம்மையே வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை தனக் கெனின்!
தன்னைத்தான் காக்க பொய்க்காப்பான் காவாக்கால்
சோகாப்பன் சொல்லிழுக்குப் பட்டு!
செல்வத்துள் செல்வம் பணம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை!
பொய்ம்மையே வாய்மையெனக் காணும் கலியுகனே
உனக்கு வள்ளுவமும் பொய்யே!
துயிலெழும் பகலும் துயில் கொள்ளும்
இரவும் உனக்குப் பொய்யே!
பொய்யெனும் திரைக்குள்
ஒளித்து வைத்தவுன்
அழகு முகத்தை
அன்பிற்காவது திறவாயோ!
உனன்பும் பொய்யோ?!
வாய்மையி லல்லாது-நீ
வாழ்ந்தென்ன பயன்?
உன்னோடு வாழும்
பிறர்க்கென்ன பயனோ?!
Sunday, December 16, 2007
Subscribe to:
Posts (Atom)