Saturday, December 15, 2007

வெண்ணிலா!

வெண்ணிலவொளியில்
உன் முகமழகு!

உன்னருகாமையில்
அந் நிலவழகு!

நிலவிலுமுன்
அழகியமுகமே!

என் கார்க்குழலாலுன்
முகம் மறைத்தேன்...

...வெண்ணிலா மறைந்துவிட்டதே!
வானம் இருண்டுவிட்டதே!

அழகு!

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்...

....இன்று....
முகத்திரையை
கிழித்தால் மட்டும்....