Saturday, December 1, 2007

அறிந்திரு!

அறிந்ததை யறிந்து செயினும்...
அறியாததை யறியாமல் செயினும்...
தெரிந்ததைத் தெரியுமெனச் சொல்...
தெரியாததைத் தெரியாதென்றே சொல்...
இதுவே அறிவுடையார் செயல்!

தன்னொளிக் கொண்டு
இவ் வுலகையே
ஒளிரச் செய்யும்
சூரியன் போல்

சுய அறிவால்
நீ உயர்ந்திடு...
இதுவே அறிவுடையார் செயல்!

இரவல் ஒளியுண்டு
இரவில் தானொளிரும்
சந்திரன் போல்

இரவல் அறிவால்
உயர நினைப்பது
உன் அறிவீனம்!
இதை நீ அறிந்திரு!

No comments: