Monday, November 19, 2007

வழுக்கி!

கல் தடுக்கி
மண்ணில் விழுந்தேன்
எழுந்தேன்

கால் வழுக்கி
சேற்றில் விழுந்தேன்
எழுந்தேன்

விதி வழுக்கி
வீதியில் விழுந்தேன்
எழுவேன்!
நிச்சயம் நான்
எழுவேன்!

2 comments:

வினோத்குமார் கோபால் said...

விழும் போது மழலையாய் இருந்தாய்
எழும் போது மலையாய் எழுவாய்

காயத்ரி said...
This comment has been removed by the author.