அன்று வியந்திருந்தேன்!
எனை நனைத்தது
மழையா? உன் நினைவா? என்று!
குளிர்த்தது நிலவா? உன் முகமா?
இனித்தது மொழியா? உன் குரலா?
வெண்மைப் பாலா? உன் மனதா?
இன்றும் வியக்கிறேன்!
சுடுவதுத் தீயா? உன் சொல்லா?
கொதிப்பது நீரா? என் மனமா?
கசப்பதுக் காயா? உன் குரலா?
வெளுத்தது நிறமா? உன் குணமா?
இதுக் குழப்பமா? மாற்றமா?
பொய்யெது? மெய்யெது?
ம்........................................
உன் காதல் பொய்!
என் சிந்தை மெய்!
சிந்தித்து....உணர்ந்துக்கொண்டேன்!
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment