Wednesday, November 21, 2007

ஆர்வக் கோளாறு!

அன்றெனக்குத் திருநாள்!

உன்னழகு முகத்தைக்
கணினியில் பார்த்தாலே
பரவச மடைவேன்!
புத்துணர்வுப் பெறுவேன்!

" இன்றோ நேரில்....
என்னாவேனோ"...என்றிருந்தேன்!

உன்னைக் காண....விளையாட்டில்
உன்திறனைக் காண
ஓடோடி வந்தேன்!

கண்டேன்...வியந்தேன்!
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கித் திளைத்தேன்!

சாதனைகள்பல நீ புரிந்தபோதும்
தீராத தாகம் எனக்கு!

வெற்றிக் கோப்பை
உன் கையிலா?
என் கையிலா?!
ஒன்றும் புரியவில்லை!

உன்னாலன்றோ
கோப்பைக்குப் பெருமை!

கோடிக்கும் பெருமை!

எனினும் இவை யிரண்டும்
உன்சிறுப் புன்னகைக்கு ஈடாகுமா?

நான் நேசிப்பது
விளையாட்டையா?
உன்னையா?

"விளையாட்"டென்றால்
அதன்மீது எனக்குக்
காதலாம்! ஆர்வமாம்!

'உன்னை" யென்றாலோ
ஆர்வக் கோளாறாம்!

உளறுகின்றனர்...
புரியாதவர்கள்!

No comments: