இசையிலெனை மறந்து
லயித்திருக்கும் பொழுதெல்லாம்....
அவன் குரலென்னை
திசைத் திருப்பும்!
நேசிக்கும் என்தமிழில்
உறைந்திருக்கும் பொழுதினிலும்...
என்கரம்பற்றி அவனோடு
இழுத்துச் செல்வான்!
அயர்ந்துறங்கும் வேளையிலாவது
இவன் என்னை
விட்டு வைக்கிறானா?!
அவன் முகத்தோடு
என்முகம் வைத்து
கதைப்பேசச் சொல்வான்!
தன் நண்பனிடம்
என் பெருமைப் பேசுவான்!
என்னையும் அவன்
தோழியாக்கிக் கொள்வான்!
பணிகளில் குறுக்கிடுவான்
தன்னாணைப் பிறப்பிப்பான்!
அதிகாரம் செய்வான்!
அடிமையாக்குவான்!
அடித்தாலும் என்னை
அணைத்தேக் கொல்வான்!
முத்தம்வாரி இறைப்பான்!
குறும்புகள் பலப்புரிந்தென்னைக்
கொள்ளைக் கொள்வான்!
எனையழைக்கும் மறுநொடி!
அவனருகில் நானிருப்பேன்!
அவனன்றி யாரழைப்பார்
என்னை..." அம்மா! வா இங்கே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment