தன்னைத் தானறியான்,
தன் மனமும்
தானறியான்,
ஊரறியான்,
உழைப்பறியான்,
வெற்றியறியான்,
தோல்வியிதுவென
தானறியான்,
உணவறிவான்,
உறக்கமறிவான்,
உண்டுறங்குவதே
சுகமென்பான்,
சோம்பித்திரிவான்,
இவன்கருதி
பிறருழைப்பர்,
அவருழைப்பில்
தானமர்வான்,
இன்றுமிவர்..
இவனருகில்
இருப்பரேன்?
திருந்த
மறுப்பரேன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment