Thursday, November 29, 2007

ஏன்?

தன்னைத் தானறியான்,
தன் மனமும்
தானறியான்,

ஊரறியான்,
உழைப்பறியான்,

வெற்றியறியான்,
தோல்வியிதுவென
தானறியான்,

உணவறிவான்,
உறக்கமறிவான்,
உண்டுறங்குவதே
சுகமென்பான்,
சோம்பித்திரிவான்,

இவன்கருதி
பிறருழைப்பர்,
அவருழைப்பில்
தானமர்வான்,

இன்றுமிவர்..
இவனருகில்
இருப்பரேன்?
திருந்த
மறுப்பரேன்?

No comments: