Friday, November 30, 2007

ரோபோ!

பள்ளி சென்று
வீடு திரும்பும்
தன்செல்வ மைந்தனை

அகம் குளிர...
முகம் மலர...
புன்முறுவலாய்...

அன்போடழைத்து...
அணைத்து...
கொஞ்சி...
விளையாடி...
உறவாட...

ஆசையாய்...
ஆவலாய்...
காத்திருக்குமாம்...
ரோபோ!
நாளை.....

இவ்வின்பம் தொலைத்து...
இவன் ஆகிவிடுவான்...
ரோபோ!....
நாளை.....

அறிவியலோ டிணைந்து...
இன்னும் எங்கெங்கு...
செல்வானோ...
இம்மனிதன்....!....?....

No comments: