Sunday, November 18, 2007

நிசப்தம்!

குண்டுகள் துளைத்த உடல்கள்
எங்கள் தெருவெங்கும் சிதறும்
ரத்தம் ஆறென வழிந்தோடும்
குற்றுயிராய்க் கிடக்கும் உடல்களை
மனிதனாக்கப் போராடும் என்னன்பு உள்ளங்கள்!

நாட்கள் சிலவே கடந்தன!
மீண்டும் எங்கள் தெருவில்
வெள்ளமென மழை!
வருணதேவனின் சீற்றத்தால்
வலுவிழந்த என் சகாக்கள்
தென்படவில்லையே! மூழ்கிவிட்டனரோ!
குற்றுயிராய்க் கிடக்கும் உடல்களை
மனிதனாக்கப் போராடும் என்னன்பு உள்ளங்கள்!

இவையாவையும் அறியாதவன்போல்
அமர்ந்திருக்கும் என் இறைவா!
உன் சந்நதியில்மட்டும் ஏன் நிசப்தம்?
கண்டும் காணாமல் இருக்கிறாயே!
நீ கல்லாகிவிட்டதாலா?

No comments: