Sunday, November 18, 2007

நிபந்தனை!

நீ எனக்காகக் காத்திருக்கிறாய்
சுட்டெரிக்கும் சூரியன் தடுத்தாலும் வருவேனென்று
நானறிவேன் என்னன்பே!
நானில்லையெனில் நீ உயிர்த்திருக்க மாட்டாய்!

பேதையே! அதற்காகத்தானே
என் நண்பர்களைத் தூது விட்டேன்
பகைத்துக் கொண்டாயே!

இருப்பினும்...உன்னைத்தேடி
வழியெங்கும் ஓடி
நீ காணுமிடமெல்லாம் தேங்கி
உனக்காகக் காத்திருந்தேனே!

நீயோ...ஒவ்வொரு முறையும்
என்னைப் பாழாக்கி...வீணாக்கி....
இறுதியில் என்னை
ஆவியாக்கி விட்டாய்!

மீண்டும் வருவேன்!
அன்றாவது நான் தங்க ஓரிடம் தருவாயா?
மறுப்பாயெனில்...
இனி என்றும் உனைக் காண
நான் வருவதாக இல்லை!

மனிதனுக்கு மழை விதிக்க வேண்டும்
இப்படி ஒரு நிபந்தனை!

No comments: